உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

காரைக்கால்: திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவாரவிழாவையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சிவ ஆலயங்களில் கார்த்திகை மாத சோமவார திங்கள் கிழமைகளில் விஷேச பூஜைகள் நடைபெறும்.திருநள்ளார் கோவிலில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் 108 சங்காபிஷேகம் நடந்தது வந்தது. சோமவார நிறைவையொட்டி இன்று 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, புன்னியாகவாஜனம், கலசபூஜை, மகாபூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது. பின் தர்பாரண்யேஸ்வர், தியாகராஜருக்கு அபிஷேகம் மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவையொட்டி கோவிலில் உள்ள சொர்ணகணபதி, முருகன், பிரணாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது.சங்காபிஷேகத்தில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !