நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 2022ம் ஆண்டுக்கான முன்பதிவு துவக்கம்
ADDED :1384 days ago
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2022ம் ஆண்டுக்கான தினசரி அபிஷேகம், பூஜைகளுக்கான முன்பதிவு துவங்கியது.
இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் ரமேஷ் கூறியதாவது: 2022ம் ஆண்டுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது. தற்போது ஒரு நாள் அபிஷேகத்துக்கு, ஐந்து கட்டளைதாரர்கள் வீதம் பதிவு செய்யப்படுகிறது. ஒருவருக்கு தலா, 6,000 வீதம், ஒரு நாள் வடைமாலை மற்றும் அபிஷேகத்துக்கு, ஐந்து பேரிடம் மொத்தம், 30 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். பக்தர்கள் தொகையை செலுத்தி, முன்பதிவு செய்து ரசீது பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
சுவாமி அலங்கார கட்டணம்: ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம் செய்ய, 3,000 ரூபாய், தங்க கவசம், 5,000, தங்கத்தேர் இழுத்தல், 2,000, வெள்ளி கவசம், 750, நாமகிரி தாயார் தங்க கவசம், 750, நரசிம்மர் திருக்கல்யாணம், 2,500 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.