பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆருத்ரா சிறப்பு பூஜை
ADDED :1392 days ago
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆருத்ரா சிறப்புபூஜை நடந்தது.பத்திரகாளி அம்மனுக்கு கணபதி ஹோமம் செய்யப்பட்டு சிறப்புபூஜைகள் நடந்தது.பின்பு சிவனுக்கு பால்,சந்தனம், மஞ்சள், திருமஞ்சன பொடி,பன்னீர் உட்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது.சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள்,தீபாராதனை நடந்தது.பூஜையில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.