உலக மீட்பர் ஆலயத்தில் திருக்குடும்ப விழா
ADDED :1457 days ago
தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகர் பங்கு உலக மீட்பர் ஆலயத்தில் திருக்குடும்ப விழா நடந்தது. பங்கு பாதிரியார் சேசு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். 25,50 ஆண்டுகள் ஆன தம்பதியருக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப் பட்டனர். ஏராளமானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ராம்நகர் பங்கு குடும்ப நலவாழ்வு பணிக்குழுவினர் செய்திருந்தனர்.