புத்திமான் பலவான்
ADDED :1469 days ago
புத்திமான் பலவான் என்பதற்கேற்ப புத்திக்கூர்மையும், உடல்பலம் கொண்டவர் அனுமன். மனைவியைப் பிரிந்த ராமர் மனம் மகிழும் விதத்தில் ‘கண்டேன் சீதையை’ என்று சொல்லி உற்சாகப்படுத்தியவர். அவரது அசாத்திய பலத்தை யாரும் எடை போட முடியாது. கடலை அநாயாசமாகத் தாண்டுவது, பிரம்மாண்டமான மலைகளைப் பெயர்த்து வருவது, வனத்தையே துவம்சம் செய்வது என அவனது பராக்கிரமத்தைப் பட்டியலிட ஆரம்பித்தால் அது சுலபத்தில் முடியாது. வாலில் நெருப்பு பற்ற வைத்த அவமானப்படுத்தியதற்காக இலங்கையையே தீக்கிரையாக்கினார். ராமதுாதரான இவருக்கு அனுமன், ஆஞ்சநேயர், வாயுபுத்திரன், மாருதி என பல பெயர்கள் உண்டு.