உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுகடம்பூர் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச விழா கொடியற்றத்துடன் துவக்கம்

சிறுகடம்பூர் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச விழா கொடியற்றத்துடன் துவக்கம்

செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. செஞ்சி சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 42வது ஆண்டு தைப்பூச திருவிழா வரும் 18ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு வேள்வியும், 7.30 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும், 10.30 மணிக்கு நேர்த்திகடன் செலுத்த விரதம் இருக்கும் பக்தர்களுக்கும், விழா குழுவினருக்கும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !