உத்திராயன புண்ணியகால உற்சவம்: அண்ணாமலையார் உலா
ADDED :1543 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், உத்திராயன புண்ணியகால உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தை முன்னிட்டு உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பிறகே சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.