உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மத்தில் சிறந்தது எது விளக்குகிறார் வள்ளலார்

தர்மத்தில் சிறந்தது எது விளக்குகிறார் வள்ளலார்

* பசியால் துன்பப்படும் உயிர்களுக்கு உணவு கொடு. இதுவே தர்மத்தில் சிறந்தது.
* ஜாதி, சமயம், இனம், நிறம், நாடு, மொழி, நாகரிகம் ஆகிய எந்த வகையிலும் பேதம் பார்க்காதே.  
* அன்பு, இரக்கத்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தால் நிச்சயம் கடவுள் உனக்கு அருள்புரிவார்.
* மரங்களை அழிக்காதே.
* எல்லாம் கடவுளின் செயல் என்று அறிந்தால் துன்பம் வராது.
* மெதுவாக பேசு. இது உனது ரகசியங்களை பாதுகாக்கும்.
* பறவைகளை கூண்டில் அடைத்து அவற்றை துன்புறுத்தாதே.
* நீ செய்த புண்ணியத்தால் உனக்கு மனித பிறவி கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்து.
* பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொய் சொல்லாதே.
* ‘எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்’ என கடவுளிடம் வேண்டிக்கொள்.
* நல்லவர்களின் மனம் நடுங்கும்படி செயல்படாதே.
* உண்மையை பேசு. உனது வார்த்தைக்கு மதிப்பு கூடும்.  
* பணம் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் நபர்களுடன் நட்பு கொள்ளாதே.
* எப்போதும் பொதுநோக்கத்துடன் செயல்படு.
* அனைவரிடமும் நல்ல விதமாக பேசி புண்ணியத்தை தேடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !