உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆள் பாதி.. ஆடை பாதி!

ஆள் பாதி.. ஆடை பாதி!


அவசர வேலையாக வெளியூருக்கு புறப்பட்டார் முல்லா. காலைக் கடனை முடிக்க எண்ணிய அவர் பொது குளியல் அறைக்குச் சென்றார். அழுக்கான ஆடை உடுத்திய முல்லாவைக் கண்ட பணியாளர்கள் சிலர் சீக்கிரமாக குளித்து விட்டு போகும்படி விரட்டினர். ஆனால் அவர்களுக்கு ஆளுக்கொரு தங்கக்காசு கொடுத்தார் முல்லா.
மறுநாள் காலையில் மீண்டும் குளிக்கச் சென்றார். தங்கக்காசு கிடைக்கும் என எண்ணி, தங்களால் முடிந்தளவு பணியாளர்கள் அவரை உபசரித்தனர். கடைசியில் பரிசுக்காக காத்திருந்தனர். வெளியே வந்த முல்லா ஆளுக்கொரு செப்பு காசு கொடுத்தார்.
‘‘இன்று நாங்கள் உங்களை சிறப்பாக கவனித்திருக்கிறோம். அதற்கு பரிசு இதுதானா’’ எனக்கேட்டனர்.
‘‘நேற்று செய்த பணிக்கு செப்புக் காசு, இன்று செய்து பணிக்கு தங்கக்காசு’’ எனச் சிரித்தார்.
‘‘இனியாவது அனைவரையும் சமமாக கருதுங்கள். யார் மீதும் அலட்சியம் காட்டாதீர்கள்’’ என்றார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !