உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்

வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனுறை ஆகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசுவாமி தையல்நாயகி அம்மன் விநாயகர் செல்வ முத்துக்குமாரசாமி அங்காரகன் செவ்வாய் தன்வந்திரி ஆகிய தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இந்நிலையில் செல்வ முத்துக்குமார சாமிக்கு தைமாத உற்சவத்தை முன்னிட்டு கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது அதனைத் தொடர்ந்து தினமும்   செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு யானை வாகனம், வெள்ளி இடும்பன் வாகனம் ,காமதேனு வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதிஉலா காட்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது .முன்னதாக வள்ளி தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் செல்வமுத்துக்குமாரசாமி எழுந்தருளினார். பின்னர் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை நான்கு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !