உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷ விழா: கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

பிரதோஷ விழா: கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

திண்டிவனம்: திந்திரிணீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில்,மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

திண்டிவனத்தில் 1,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திந்திரிணீஸ்வரர் கோவிலில், இன்று (14ம் தேதி) மாலை நடந்த சனி பிரதோஷ விழாவில், மூலவர் மற்றும் அவர் எதிரில் வீற்றிருக்கும் நந்தி பகவானுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், உள்ளிட்ட 11 அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உற்சவர் திந்திரிணீஸ்வரர் சமேதராக மரகதாம்பிகையுடன் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !