உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றுகால் பகவதி பொங்கல் விழா

ஆற்றுகால் பகவதி பொங்கல் விழா

நாகர்கோவில்: ஆற்றுாகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நடைபெற்றது. பெண்கள் வீடுகளில் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லுார் செல்லும் வழியில் திருவனந்தபுரம் கரமனையில் கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும், முதியவர் ஒருவர் கனவில் வந்து தனக்கு கோயில் எழுப்ப கூறியதின் அடிப்படையில் கட்டப்பட்ட கோயில் இன்று பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஆண்டு தோறும் மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கில் பெண்கள் கலந்து கொள்வர். இரண்டு முறை இது கின்னஸ் ரிக்கார்டில் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி அம்மனை காப்பு கட்டி குடியிருத்திய நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒன்பதாம் நாள் விழாவான  இன்று (17 ம் தேதி) காலை 10.50 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள அடுப்பில் பொங்கலிடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பெண்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட்டனர். வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் இப்பகுதியில் உள்ள வீட்டு வளாகத்தில் பொங்கலிட்டனர். திருவனந்தபுரம் நகர் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். நாளை ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !