பழநி உண்டியல் காணிக்கை ரூ 2 கோடியே 61 லட்சம்
ADDED :1424 days ago
பழநி: பழநி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 2 கோடியே 61 லட்சம் கிடைத்துள்ளது. பழநி மலைக் கோயிலில் தைப்பூசத் திருவிழாவுக்கு பின் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 871 கிராம் தங்கமும், 27030 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ 2 கோடியே 61 லட்சத்து 95 ஆயிரத்து 700 மற்றும் 221 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், மதுரை துணை ஆணையர் பொன் சுவாமிநாதன் தான்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் நந்தகுமார் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.