உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி பெருமாள் கோயில்களில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம்

பரமக்குடி பெருமாள் கோயில்களில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம்

பரமக்குடி: பரமக்குடி பெருமாள் கோவில்களில் மாசி மகத்தையொட்டி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் பவுர்ணமியுடன் இணைந்து வரக்கூடிய மகம் நட்சத்திர நாளில் மாசிமக விழா கொண்டாடப்படுகிறது. இதன் படி பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கருட வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். அங்கு மாசி மகத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்த பெருமாள் திருக்கோவிலை அடைந்தார். பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு ராமர் கருட வாகனத்தில் வீதி வலம் வந்தார். தொடர்ந்து தரைப்பாலம் அருகில் உள்ள பஜனை மடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம், பஜனைகள் நடந்தன. அதேபோல் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் மாசி மக தீர்த்தவாரி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !