திருச்சுழி மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா
ADDED :1362 days ago
திருச்சுழி : திருச்சுழி மாரியம்மன் கோயிலில் மாசி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கி, பத்து நாட்கள் நடைபெறும் விழாவில், நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் ,அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.