உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா சிவராத்திரி காப்பு கட்டு

மஹா சிவராத்திரி காப்பு கட்டு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கோயிலான அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயிலில் மஹா சிவராத்திரி, பாரிவேட்டை திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து மூலவர்கள் அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரமானது. பின் மூலவர்கள் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. நந்தி மண்டபம் மீது தர்ப்பைப்புல் கட்டி மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது.விழா நடக்கும் மார்ச் 6 வரை தினமும் பூஜை நடக்கும். பிப்., 27 கப்பரை பூஜை, மார்ச் 1 சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், குருநாத சுவாமி கோயிலுக்கு புறப்பாடாகி அங்கு ஒரு வாரம் பூஜை, பாரிவேட்டை, பூப்பல்லக்கு முடிந்து அம்மன் மீண்டும் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு கொண்டு செல்லப்படுவார். கோயில் பூஜாரிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !