திருமணப்பாடல்
ADDED :1405 days ago
ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் ஆறாவதாக ‘வாரணமாயிரம்’ அமைந்துள்ளது. நீண்டகாலம் திருமணம் தடைபடும் பெண்கள் இதைப் பாராயணம் செய்யலாம். கண்ணன் தன்னை வந்து மணப்பதாக ஆண்டாள் கனவு காணும் பாடல் இது.
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ! நான்.