மன்னீஸ்வரர் கோவில் சிவராத்திரி விழா
ADDED :1356 days ago
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் சிவராத்திரி விழா நாளை நடக்கிறது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், 46வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நாளை நடக்கிறது. நாளை மாலை 6:00 மணிக்கு கணபதி பூஜையும், இரவு 7:00 மணிக்கு, முதல் கால அபிஷேக ஆராதனையும், இரவு 11:00 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகமும் நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு அச்சம் பாளையம் சண்முகம் குழுவின் பஜனை துவங்கி, மறுநாள் காலை வரை நடக்கிறது. வரும் 2ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு நான்காம் கால அபிஷேக ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை சிவராத்திரி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.