திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸ்வ விழாவை முன்னிட்டு பெருமாள் தீர்த்தவரி நடந்தது.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வர் கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்ரீநளபுரநாயகி ஸமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோவிலில் பிரம்மோத்ஸ்வ விழாவை முன்னிட்டு கடந்த 23ம் தேதி வாஸ்து சாந்தியுடன் கொடியேற்றத்துடன் துவக்கியது. இதில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீநளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். கடந்த 27ம் தேதி கருடசேவை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. இன்று திருத்தேர் மற்றும் நளதீர்த்தத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாணம் உத்ஸ்வம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் பெருமாளை தரிசனம் செய்தனர்.