உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனின் 12 கைகளும் என்ன செய்கின்றன?

முருகனின் 12 கைகளும் என்ன செய்கின்றன?


முதல் கை- தேவர், முனிவர்களைப் பாதுகாக்கிறது.
இரண்டாம் கை- முதல் கை செய்யும் பணிக்கு உதவி செய்கிறது.
மூன்றாம் கை- உலகத்தை தன் கைக்குள் அடக்குவதற்காக அங்குசத்தை செலுத்துகின்றது.
நான்காம் கை- ஆடை உடுத்திய தொடையில் உள்ளது.
ஐந்தாம் கை- நிறைந்த அருளைத் தருகிறது.
ஆறாம் கை- வேல் கொண்டு பக்தர்களைப் காக்கிறது.
ஏழாம் கை- சரவணபவ என்னும் மந்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் மார்பில் உள்ளது.
எட்டாம் கை- மார்பில் இருந்து தொங்கும் மாலையைத் தாங்குகிறது.
ஒன்பதாம் கை- முனிவர்களின் யாகபலனை ஏற்கிறது.
பத்தாம் கை- இதுவும் யாகபலனையே ஏற்கிறது.
11ம் கை- நாடு செழிக்க மழை தருகிறது.
12ம் கை- வள்ளி, தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !