ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தாயார் சேர்த்தி சேவை
ADDED :1300 days ago
ஸ்ரீரங்கம் : பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தாயார் சேர்த்தி சேவை நடந்தது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தாயார் சேர்த்தி சேவை இன்று நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.