கனவில் வந்த கணேசர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :1330 days ago
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் கனவில் வந்த கணேசர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகை அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பூஜகர் சரவணன் பூஜைகளை செய்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.