காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம்: மீண்டும் துவக்கம்
ADDED :1548 days ago
ஸ்ரீ காளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கோயிலில் அபிஷேக தீர்த்தம் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்காமல் இருந்து வந்த நிலையில் இன்று 28.3.2022 காலை முதல் மீண்டும் பச்சை கற்பூர அபிஷேக தீர்த்தத்தைப் பக்தர்களுக்கு வழங்குவதை மீண்டும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி நெத்தி.ராஜு , அறங்காவல் குழு உறுப்பினர்கள் தொடங்கி வைத்தனர்.