மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ பூஜை
ADDED :1330 days ago
மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பங்குனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மத்தியபுரி அம்மனுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டிஎஸ்கே மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இன்று (29ம் தேதி)பங்குனி மாதம் செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமான் மூலவர் பிரதோஷ நாயகர் பிரதோஷ நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி கோயிலில் மூன்று முறை வலம் வந்து அருள்பாலித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.