சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு: பக்தர்கள் சாமி தரிசனம்
ADDED :1330 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்திருந்தனர். காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையிலும் பக்தர்கள் ஆங்காங்கே மர நிழல்களில் தங்கி ஓய்வெடுத்து கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்பினர். மாலை 4:30 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை, கோவில் பூசாரிகள் செய்தனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.