உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிவாடியில் மண்டல பூஜை

கன்னிவாடியில் மண்டல பூஜை

கன்னிவாடி: கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், 5 சித்தர்களின் பிரதிஷ்டையை முன்னிட்டு மண்டல பூஜை நடந்தது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கன்னிவாடி அருகே சோமலிங்கபுரத்தில் மெய்கண்ட சித்தர் குகையில் சோமலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு, போகர், மெய்கண்ட சித்தர், குண்டலி சித்தர் வாலையானந்த சித்தர், முத்தானந்த சித்தர் ஆகியோரின் சிலை பிரதிஷ்டை சமீபத்தில் நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று மண்டல பூஜை நடந்தது. கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில், ஓம்கார விநாயகர், மூலவர், பாலதண்டபாணி, சித்தர்கள், வாலை சக்திக்கு, தீர்த்த அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரம், திருவாசக பாராயணத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !