உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ்ப் புத்தாண்டு, பிரதோஷம் அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தமிழ்ப் புத்தாண்டு, பிரதோஷம் அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை : தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தங்க தேரில் மூன்று பிரகாரத்தில் வலம் வந்து   உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில்   பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  கோவில்,  சம்மந்தவிநாயகர் சன்னதி முன் புதிய வருட பஞ்சாங்கத்திற்கு, சிறப்பு பூஜை செய்து கோவில் குருக்கள்கள் பஞ்சாங்கத்தை வாசித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை  மாத  பிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்தி பெருமானுக்கு சிறப்பு சந்தனம் அபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !