சித்ரா பவுர்ணமி வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
ADDED :1309 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன் பாளையம் அருகே சித்ரா பவுர்ணமியையொட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பாரதிநகர் பகுதியில் வராஹி அம்மன் ஆலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை சித்ரா பவுர்ணமியை ஒட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக அலங்காரம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.