மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மொபைல் போனுக்கு தடை
ADDED :24 minutes ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மார்ச் 10ம் தேதி முதல், ராஜகோபுரம் நுழைவாயிலில் இருந்து ஆதிமூலவர், சுப்பிரமணிய சுவாமி, பாம்பாட்டி சித்தர் சன்னதி உட்பட அனைத்து சன்னதிகள் மற்றும் கோவில் வளாகத்திற்குள் மொபைல்போன் பேசவும், புகைப்படம் எடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளதால், பக்தர்கள் ராஜகோபுரம் நுழைவாயிலில் நுழைவதற்கு முன் தங்களது மொபைல் போனை ஆப் செய்து விட்டு, அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.