நிறைகுளத்து அய்யணார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
ADDED :1268 days ago
மேலூர்: கட்டையம்பட்டியில் நிறைகுளத்து அய்யணார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. கிளாதிரியில் இருந்து பக்தர்கள் 3 கி.மீ., தொலைவி்ல் உள்ள கோயிலுக்கு புரவி மற்றும் சிலைகளை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இத் திருவிழாவில் கட்டையம்பட்டி, கிளாதிரி, பூஞ்சுத்தி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.