உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணத்தில் அத்திவரதர் தரிசனம் நாளை நிறைவு; குவியும் பக்தர்கள்

கும்பகோணத்தில் அத்திவரதர் தரிசனம் நாளை நிறைவு; குவியும் பக்தர்கள்

தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு பிப்.,28 ம்தேதி அத்திவரதர் சிறப்பு பூஜையுடன் வெளியே வந்தார். 10 நாட்கள் நடைபெற்று வரும் தரிசனம் நாளை நிறைவு பெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், பிரம்மன் கோவில் தெருவில், சவுராஷ்டிர தர்ம பரிபாலன கமிட்டி நிர்வாகத்தால்,  கடந்த 1739ம் ஆண்டு  கட்டப்பட்ட வரதராஜ பெருமாள், வேதநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், அத்திமரத்தினால் உருவாக்கப்பட்ட, அத்திவரதை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும், முன்ஜென்ம பாவங்களும், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். கடந்த 1915ம் ஆண்டு அத்திவரதர் பாதாள அறையில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பின்னர் சுமார் 98 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2013ம் ஆண்டு, அத்திவரதர் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு  பிப்., 1ம் தேதி முதல் அத்திவரதர் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். நாளை 10ம் தேதியுடன் தரிசனம் நிறைவு பெறுகிறது. தினமும் காலை 8 மணி முதல்  மதியம் 12 மணி வரையும், மாலை  5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் சாமி தாிசனம் செய்ய உகுந்த நேரம் என  சவுராஷ்டிரா தர்மபரிபாலன கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !