உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்

புட்டபர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்

அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தியடைந்த தினம் இன்று.

சிறப்பான எதிர்காலம் காத்திருக்கு நம்பிக்கை தருகிறார் சாய்பாபா :
* நேரத்தை வீணாக்காமல் கடமையை செய். சிறப்பான எதிர்காலம் அமையும்.
* கடவுளுடன் பேசுவது வழிபாடு. அவர் பேசுவதை கேட்பது தியானம்.
* சொல்வது எளிது. அதன்படி நடப்பது கடினம்.
* பணம் இல்லாதவன் ஏழை அல்ல. பேராசை உள்ளவனே உண்மையான ஏழை.
* உன்னிடம் உள்ள குற்றத்தை கவனி. பிறரிடம் உள்ள நல்ல குணத்தைப்பார்.  
* ஆன்மிக சிந்தனை வளர வளர பிரச்னைகள் தேய ஆரம்பிக்கும்.
* பணம் இல்லாவிட்டாலும் நல்ல மனம் இருந்தால்கூட பிறருக்கு உதவலாம்.
* ஆயிரம் அறிவுரைகளை வழங்குவதை விட, ஒரு பயனுள்ள செயலில் ஈடுபடு.
* உலகமே ஒரு பெரிய பல்கலைக்கழகம். அதில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரும் ஆசிரியரே.
* உணவை வீணாக்காதே. அன்னதானம் செய்த புண்ணியத்தை பெறுவாய்.
* ருசிக்காக இல்லாமல் விரைவில் செரிக்கும் உணவை சாப்பிடு.
* ரோஜாவின் அழகை பார்ப்பவன் அறிவாளி. அதில் உள்ள முள்ளை காண்பவன் முட்டாள்.
* உடல்நலம் இல்லாதவன் சாப்பிட விரும்புவதில்லை. மனநலம் இல்லாதவன் கடவுள் மீது பக்தி செலுத்துவதில்லை.
* பிறருக்கு உதவ வேண்டும் என நினைத்தால்கூட கடவுளின் பார்வை உன் மீது விழும்.
* வாழ்வில் குறுக்கிடும் பிரச்னைகளை கண்டு கலங்காதே. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !