காளஹஸ்தி சிவன் கோயிலில் மத்திய சமூக நீதி துறை இணை அமைச்சர் தரிசனம்
ADDED :1294 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு இன்று மத்திய சமூக நீதி துறை இணை அமைச்சர் (Empowerment government of inda) நாராயணசாமி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக குடும்பத்தாரோடு கோயிலுக்கு வந்தவரை கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக.சீனிவாசுலு மற்றும கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானபிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.மேலும் சாமி படத்தையும் கோயில் தீர்த்தப் பிரசாதங்களை கோயில் சார்பில் வழங்கப்பட்டது.