உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான கோவிலை புதுப்பிக்க வலியுறுத்தல்

பழமையான கோவிலை புதுப்பிக்க வலியுறுத்தல்

 உடுமலை : உடுமலை அருகே உள்ள, மூவர் கண்டியம்மன் கோவிலை புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பழமை வாய்ந்த மூவர் கண்டியம்மன் கோவில் உள்ளது.

இப்பகுதியில், வரலாற்று ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட மேற்பரப்பு ஆய்வில், பல நுாற்றாண்டுக்கு முற்பட்ட, தொல்லியல் பொருட்கள் கண்டறியப்பட்டது.இவ்வாறு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில், பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. ராஜகோபுரம், கருவறை கோபுரம் பொலிவிழந்து காணப்படுகிறது.சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன் கோவிலை, புதுப்பித்து கும்பாபிேஷகம் நடத்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுப்பகுதி பக்தர்கள் பங்களிப்புடன் மராமத்து பணி மட்டும், குறிப்பிட்ட இடைவெளியில் செய்யப்பட்டு வருகிறது.கோவிலை முழுமையாக புதுப்பித்து, கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். கோவில் தேரோட்டம் மீண்டும் நடைபெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !