கமுதி அருகே கோயில் திருவிழா முன்னிட்டு விளக்குபூஜை
ADDED :1284 days ago
கமுதி: கமுதி அருகே பூலாங்கால் கிராமத்தில் வண்ணாரமுத்து கோயில் களரி திருவிழா நடந்தது.இதனைமுன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். தினந்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வந்தது. இந்நிலையில் களரி விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பின்பு மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பூக்குழி இறங்கியும், பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூலவரான வண்ணாரமுத்து பால்,சந்தனம் உட்பட 17 வகையான அபிஷேகம், சிறப்புபூஜைகள் நடந்தது. கிராமமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி, முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.