உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புத்தேரி பெருமாள் கோவிலில் தோஷ நிவர்த்தி பூஜை

புத்தேரி பெருமாள் கோவிலில் தோஷ நிவர்த்தி பூஜை

பெண்ணாடம், பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது. இதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சந்திர மவுலீஸ்வரர் சுவாமிக்கு விக்னேஸ்வர பூஜை, கலசபூஜை நடந்தது. பகல் 11:00 மணியளவில் சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது. 11:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !