உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் பௌர்ணமி சிறப்பு பூஜை

காளியம்மன் கோவில் பௌர்ணமி சிறப்பு பூஜை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிலுகவயல் தாழைமடல் காளியம்மன் கோவிலில், பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவர் காளியம்மனுக்கு, சந்தனம், குங்குமம், பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, அம்மன் துதிப் பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜையை முன்னிட்டு பெண்கள் கோவிலின் முன்பு கும்மி ஆட்டம் ஆடி நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !