உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் ரோப்கார் சேவை நிறுத்தம்

பழநி மலைக்கோயில் ரோப்கார் சேவை நிறுத்தம்

பழநி: பழநி மலைக்கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை நாளை முதல் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட உள்ளது.

பழநி முருகன் மலைக்கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை ஆகியவை உள்ளன. இதில் ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் செல்ல முடியும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் 45 நாட்கள் நடைபெற உள்ளது. எனவே நாளை (ஜூன் 16) முதல் ஜூலை 30 வரை ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது.. எனவே பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வின்ச், படி பாதை, யானைப்பாதை பயன்படுத்துமாறு கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !