உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித அலங்கார அன்னை ஆலய விழா கொடியேற்றம்

புனித அலங்கார அன்னை ஆலய விழா கொடியேற்றம்

சிவகங்கை:சிவகங்கை புனித அலங்கார அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. புனித அலங்கார அன்னை ஆலய விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு, சிறப்பு திருப்பலி நடந்தது. மறை மாவட்ட பொருளாளர் மைக்கேல்ராஜ் கொடியேற்றினார்.
பங்கு தந்தை சேவியர், சவரிமுத்து முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6 மணிக்கு ஆலயத்தில் சிறப்பு நவநாள் திருப்பலி நடக்கிறது. ஆக.,14 அன்று மாலை 6 மணிக்கு ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் விழா திருப்பலியும், அதை தொடர்ந்து தேர்பவனியும் நடைபெறும்.ஆக.,15 அன்று காலை 8.30 மணிக்கு நன்றி திருப்பலியும், அதை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. சிவகங்கை அருள்சகோதரிகள், பங்கு பேரவை, இறைமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !