மீசையுடன் காட்சி அளிக்கும் பெருமாள்
ADDED :1239 days ago
பார்த்தசாரதி கோலத்தை மையமாகக் கொண்ட கோயில் சென்னை திருவல்லிக்கேணி. இங்கு நின்ற கோலம் – பார்த்தசாரதி பெருமாள், அமர்ந்த கோலம் – நரசிம்மர், சயனக்கோலம் – மன்னாதர் ஆகிய மூவரையும் கண்டு களிக்கலாம். யாதவ குலத்தில் பிறந்தவர் கண்ணன் என்பதால் மீசையுடன் காட்சி அளிக்கிறார் பெருமாள். இவரது வலக்கை சங்கினை ஏந்தி இருக்க, இடக்கை தனது திருவடியை பக்தனுக்கு நினைவுறுத்தும் வகையில் வரதமுத்திரையுடன் உள்ளது. போரில் பங்கு பெற மாட்டேன் எனக் கூறிய காரணத்தால் சக்கரம் இல்லை. பெருமாளுக்கு வலது புறத்தில் ருக்மணி காட்சி தருகிறாள். அருகில் அண்ணன் பலராமர், தம்பி சாத்யகி, மகன் பிரக்த்யும்னன், பேரன் அநிருத்தன், தோழர் அக்ரூரர் உள்ளனர்.