ஐஸ்வர்ய விநாயகர் கோவிலில் சமத்துவ கும்பாபிஷேகம்
ADDED :1302 days ago
வேடசந்தூர்: வேடசந்தூர் காவலர் குடியிருப்பில் உள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய விநாயகர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. டி.எஸ்.பி., மகேஷ் தலைமையில் நடந்த இந்த கும்பாபிஷேகத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் என அனைத்து தரப்பினரும் பாகுபாடு இன்றி திரளாக பங்கேற்றனர். காவலர் குடியிருப்பில் குடியிருப்போர் சார்பில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.