தருவை சாய்பாபா கோயிலில் குருபூர்ணிமா சிறப்பு பூஜை
ADDED :1180 days ago
திருநெல்வேலி: தருவை செல்வ பாலபாக்கிய சீரடி சாய்பாபா கோயிலில் நேற்று குருபூர்ணிமா சிறப்பு பூஜை நடந்தது. குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் சீரடி சாயிநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு கூட்டு பிரார்த்தனை, அன்னதானம் நடந்தது. சீரடி சாயிநாதர் சிறப்பு மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் ஊர் பொதுமக்கள், சாய் பக்தர்கள் கலந்து கொண்டனர்.