பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் திருக்கண் அபிஷேகம்
ADDED :1367 days ago
பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு திருக்கண் அபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு பால்,தயிர், சந்தனம் இளநீர், பன்னீர் உட்பட வாசனை பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஏற்பாடுகளை தேனி ரத்தினம் ஆர்த்தோ சென்டர் மற்றும் ரத்தினம் லாரி, பஸ் சர்வீஸ் உரிமையாளர் சுந்தரவடிவேல், டாக்டர் ராஜமணிகண்டன் செய்திருந்தனர்.