உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவில் துரியோதனன் படுகளம் விமரிசை

திரவுபதி அம்மன் கோவில் துரியோதனன் படுகளம் விமரிசை

செய்யூர்: செய்யூர் திரவுபதி அம்மன் கோவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

செய்யூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், அக்னி வசந்த உற்சவ விழா, ஆண்டுதோறும் நடத்தப்படும்.கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக, விமரிசையாக நடக்கவில்லை. இதனால் இந்தாண்டு இவ்விழாவை விமரிசையாக நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர். திரவுபதி அம்மன் வசந்த திருவிழாவை முன்னிட்டு, இம்மாதம் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் மாலை, மகாபாரதம் சொற்பொழிவில், வில் வளைப்பு, சுபத்திரை திருமணம், திரவுபதி துகில், அர்ஜுனன் தபசு, அரவான் களப்பலி, கர்ணன் மோட்சம், பதினெட்டாம் போர், துரியோதனன் படுகளம் போன்ற கட்டைக்கூத்து நாடகம் நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, நேற்று மதியம் 2:15 மணிக்கு நடந்தது.

இதற்காக, கோவில் முன், களிமண்ணால் செய்யப்பட்ட 25 அடி உயர பிரமாண்ட துரியோதனன் சிலை அமைக்கப்பட்டது.நாடக நடிகர்கள் பீமன், துரியோதனன் வேடமிட்டு, மகாபாரதத்தில் போரிடும் போர்க்கள காட்சியை செய்து காண்பித்தனர். பின் கூந்தல் முடித்து, திரவுபதி அம்மனுக்கு பூச்சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இரவு 7:00 மணிக்கு தீ மிதி விழா நடந்தது. பூங்கரகம் அலங்கரித்து, கோவிலுக்கு ஊர்வலமாக வந்த பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். இன்று பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !