உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்ஸவம் துவக்கம்

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உற்ஸவம் துவக்கம்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் திருவாடிப்பூர உற்ஸவம் துவங்கியது.

சிவகங்கை சமஸ்தானத்தை சேர்ந்த இக்கோயிலில் ஆண்டாள் பிறந்த திருநட்சத்திரத்தை முன்னிட்டு திருஆடிப்பூ உற்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். நேற்று சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. இன்று காலை 7:16 மணிக்கு மேல் பெருமாள் ஆண்டாளுடன் கல்யாண மண்டபம் எழுந்தருளினர். தொடர்ந்து சக்கரத்தாழ்வார், கொடிப் படம் திருவீதி வலம் வந்தனர். கொடி படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்து காலை 10:45 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளை பட்டாச்சர்யர்கள் செய்தனர். அடுத்து கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஆண்டாள், பெருமாள் திருவீதிப் புறப்பாடு நடைபெற்றது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் ஆண்டாள், பெருமாள் வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறும். ஆக.1ல் பத்தாம் திருநாளில் தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரியுடன் உற்ஸவம் நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !