மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா ஆக.3ல் துவக்கம்
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா ஆக.3 ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.முக்கிய விழாவான திருக்கல்யாணம் வருகிற 8ம் தேதியும்,12ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் ஆடித்தபசு விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டிற்கான பிரம்மோற்ஸவ திருவிழா வருகிற ஆக.3 ந் தேதி காலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழா நாட்களின் போது சுவாமிகள் தினந்தோறும் இரவு பறங்கி நாற்காலி,சிம்மம், பல்லக்கு ஆகியவற்றில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 8ம் தேதியும்,12ந்தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சீனிவாசன், பரம்பரை ஸ்தானீகம் கோபிமாதவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.