உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பூரம் : அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

ஆடிப்பூரம் : அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை

போடி: ஆடிப்பூரத்தை (ஆண்டாள் அவதரித்த நாளை) முன்னிட்டு போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை, திருமஞ்சன அபிஷேகம், தீபாரணைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆண்டாள், சீனிவாசப் பெருமாள் நகர் வலம்புரிந்தனர்.

* போடி திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம். தீபாரதனைகள் நடந்தது. வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

* போடி தாய்ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், போடி குலாலர்பாளையம் காளியம்மன், எஸ்.எஸ்.புரம் தங்க முத்து மாரியம்மன், போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !