திருவேடகம் ஏடகநாத சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :1478 days ago
சோழவந்தான்: திருவேடகம் ஏடகநாத சுவாமி கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக சிறப்பு பூஜைகளை தொடர்ந்து அம்பாள் ஏலவார்குழலி மாட வீதிகளில் எழுந்தருளினார். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர், செயல் அலுவலர் சரவணன், அர்ச்சகர்கள் பரசுராம பட்டர், சண்முகசுந்தர பட்டர் மற்றும் திருவாடிப்பூர குழுவினர் செய்திருந்தனர்.