துர்கையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி வழிபாடு
ADDED :1152 days ago
சங்கராபுரம் : தேவபாண்டலம் துர்க்கையம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் ஏரிக்கரையில் உள்ள துர்க்கையம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.