மனதிலே குழப்பமா?
ADDED :1362 days ago
பிரகலாதனைக் காப்பதற்காக விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து, துõணிலிருந்து வெளிப்பட்டார். இரணியனை அழித்தார். அதர்மத்தை அழித்த அவர், உக்ர நரசிம்மராக சீற்றத்துடன், 14 உலகங்களையும் சுற்றி வந்தார். ஒரு உயிரைக் கொன்றால் பாவம் உண்டாகும் என்பது தர்மம். அதனால், யோகத்தின் மூலம் பிராயச்சித்தம் தேட, பல தலங்களிலும் யோகநரசிம்மராக அமர்ந்து தவம் செய்தார். வேலுõர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள யோக நரசிம்மர் மிகவும் விசேஷமானவர். மனக்குழப்பம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தெளிவு உண்டாகும்.